தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கேரள கோயில்களுக்கு நெற்கதிர்கள் அனுப்பி வைப்பு

ராஜபாளையம், ஜூலை 28: கேரள மாநில கோயில்களில் ஆண்டுதோறும் திருவிழாக்கள் களைகட்டும். குறிப்பாக, சபரிமலை ஐயப்பன் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில், கிருஷ்ணன் கோயில், கொட்டாரக்கரா விநாயகர் உள்ளிட்ட கோயில்களில் நடைபெறும் நிறை புத்திரி விழா மிகவும் பிரசித்திபெற்றது.

இந்த விழாக்களில் நன்கு விளைந்த நெற்கதிர்களை வைத்து வழிபாடு செய்வது தொன்று தொட்டு நடைபெறும் வழக்கமாகும். இதற்காக விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில் இருந்து நன்கு விளைந்த நெற்கதிர் கட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. இதன்படி இந்த ஆண்டும் நெற்கதிர்கள் வாகனங்களில் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

முன்னதாக, புதுப்பாளையம் கருங்குளம் நீர்ப்பாசன பகுதியில் இருந்து 108 நெற்கதிர் கட்டுகள் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பின்னர், கேரள கோயில்களுக்கு இரண்டு கார்கள் மற்றும் ஒரு வேனில் நெற்கதிர் கட்டுகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. கேரள கோயில் விழாக்களுக்கு கடந்த 11 ஆண்டுகாக நெற்கதிர்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ராஜபாளையம் திருவனந்தபுரம் தெருவை சேர்ந்த குளோப் நாகராஜன் தெரிவித்தார்.