தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செஞ்சேரி விநாயகர், மகாகாளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பெரம்பலூர்,மே.20: செஞ்சேரி விநாயகர், மஹாமாரியம்மன் மற்றும் மஹாகாளியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. பெரம்பலூர் அருகே உள்ள ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட செஞ்சேரி கிராமத் தில் உள்ள விநாயகர், மகா மாரியம்மன் மற்றும் மகா காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடை பெற்றது. இதனையொட்டி கடந்த 18 ம்தேதி காலை 7 மணிக்கு மேல், மங்களஇசை, விநாயகர் வழிபாடு, மகா கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மஹாதீபாரதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு யாக சாலை பிரவேசம், முதற்கால யாக வேள்வி, மகா தீபாராதனை நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக வேள்வி, யாத்ரா தானம், கலசங்கள் ஆலயம் வலம் வருதல் நடைபெற்றது.

Advertisement

காலை 9 மணிக்குள் கடக லக்னத்தில், விநாயகர் மஹா மாரியம்மன் மற்றும் மஹா காளியம்மன் ஆகிய தெய்வங்களின் ஆலய விமானம் மற்றும் மூலஸ்தான மூர்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி குழுமங்களின் தலைவர் சீனிவாசன், ஆலம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் கல்பனா சீனிவாசன் மற்றும் கிராம மூப்பாடி, ஓடும் பிள்ளை, அனைத்து கரைக்காரர்கள், கோயில் பூசாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் செஞ்சேரி கிராமம் மட்டுமின்றி, சொக்கநாதபுரம், ஆலம்பாடி, திருப்பெயர் பெரம்பலூர் குரும்பலூர், எசனை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் பொது மக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மஹா தீபாராதனை, அன்னதானம், பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு மேல் மஹா மாரியம்மனுக்கு பொங்கல் மாவிளக்கு பூஜை நடை பெற்றது. பின்னர் மகாமாரியம்மன் மற்றும் மகாகாளியம்மன் திருவீதிஉலா நடைபெற்றது.

Advertisement

Related News