தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

செய்யூரில் அளவுக்கு அதிகமாக சவுடு மண் ஏற்றி சென்ற லாரிகளுக்கு அபராதம்: வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை

மதுராந்தகம்: செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அடுத்த நல்லூர் கிராம ஏரியில் இருந்து சவுடு மண் அதிக அளவில் ஏற்றிக்கொண்டு தினமும் 300க்கும் மேற்பட்ட லாரிகள் செய்யூர் பஜார் வழியாக தார்ப்பாய் போடாமல் செல்கின்றன. இதனால், பஜார் பகுதியில் உள்ள வியாபாரிகள், இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என பலர் லாரியிலிருந்து கொட்டப்படும் மண்ணால் பாதிப்படைந்தனர். இதனால், இந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட கலெக்டருக்கு அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் புகார் அளித்திருந்தனர். இந்நிலையில், செய்யூர் பஜார் வழியாக சென்ற இரண்டு லாரிகளை செய்யூர் தாசில்தார் சரவணன் பிடித்து அபராதம் விதித்திட காவல்துறையினரிடம் ஒப்படைத்தார். இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மேலும், இதுபோன்று செல்லும் லாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement

Advertisement

Related News