தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கரூர் ஒன்றிய பகுதியில் சீர்மரபினர் உறுப்பினர் சேர்க்கை முகாம்

வேலாயுதம்பாளையம், நவ. 27: கரூர் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் சமுதாய கூடத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சீர்மரபினர் நலவாரியம் உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம் நடைபெற்றது. கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் குமார் தலைமை வகிக்கிறார். உதவியாளர் கார்த்தி மற்றும் குழுவினரிடம் முகாமில் கலந்துகொண்ட பொதுமக்கள் சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினர் சேர்க்கைக்கான படிவத்தினை பூர்த்தி செய்து படிவத்துடன் குடும்ப தலைவரின் ஆதார்டு கார்டு நகல், குடும்ப அட்டை நகல், சாதி சான்றிதழ் நகல் (குடும்பத்தில் யாரோ ஒருவருடையது), விண்ணப்பதாரரின் புகைப்படம் 3 காப்பி ஆகியவற்றை இணைத்து கொடுத்தனர்.

Advertisement

முகாமினை தமிழ்நாடு அரசு சீர்மரபினர் நல வாரிய உறுப்பினர்கள் பசுவை சக்திவேல், ராஜ் கவுண்டர், கரூர் மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வளர்மதி சிதம்பரம் ஆகியோர் பார்வையிட்டனர். முகாம் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற்றது. இந்த முகாமில் வேட்டமங்கலம் கிழக்கு, வேட்டமங்கலம் மேற்கு, கோப்புப் பாளையம் ஆகிய ஊராட்சிகளை சேர்ந்த 130 பெண்களும், 50 ஆண்களும் என 180 பேர் மனுக்கள் கொடுத்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு சீர் மரபினர் நல வாரிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட உள்ளது.

Advertisement

Related News