தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ஜூலை 7ம் தேதி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள்

திருச்செந்தூர், ஜூன் 17: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் ஜூலை 7ம் தேதி மஹா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்காக கோயில் வளாகத்தில் பல்வேறு திருப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. அத்துடன் இந்த கும்பாபிஷேக விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு வருகைதரும் பக்தர்கள் கோயிலில் நெருக்கடியின்றி வந்து செல்வதற்கான வழி, போக்குவரத்து வசதி, நடந்து செல்லும் பாதை, வாகன நிறுத்தம் ஆகியன போக்குவரத்து காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

இவ்வாறு கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த ஆய்வு செய்ய தூத்துக்குடி எஸ்பி ஆல்பர்ட் ஜான் நேற்று மாலை திருச்செந்தூர் கோயிலுக்கு வருகைதந்தார். இதைத்தொடர்ந்து திருக்கோயில் வளாகம், கடற்கரை, நாழிக்கிணறு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்ட அவர், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். ஆய்வின்போது ஏடிஎஸ்பி திபு, திருக்கோயில் இன்ஸ்பெக்டர் கனகராஜன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.