தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் கடல் சீற்றம்: படகுகளை பாதுகாப்பாக நிறுத்திய மீனவர்கள்

மாமல்லபுரம், ஜூன் 12: மாமல்லபுரத்தில் நேற்று கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி விட்டு சென்றனர். மாமல்லபுரத்தில் நேற்று காலை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. இதனால், பல மீட்டர் தூரம் கரைப்பகுதி வரை ராட்சத அலைகள் ஆக்ரோஷமாக எழும்பி வந்தன. இந்த ராட்சத அலையால் கடல் நீர் முன்னோக்கி வந்து கடற்கரையையொட்டி உள்ள ஓட்டல், ரெஸ்ட்டாரன்ட் மற்றும் ரிசார்ட்டுகள் வரை கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சி அளித்தது. மாமல்லபுரம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடல் அலையின் தாக்கத்தை தடுக்கும் வகையில், கடற்கரையொட்டி கற்களை கொட்டி தடுப்புகள் அமைத்துள்ளனர். ஆனால், தடுப்பு கற்களையும் தாண்டி கடல் அலை முன்னோக்கி வந்து தாக்குவதால் அப்பகுதி மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

மேலும், கடற்கரையையொட்டி உள்ள உணவகங்களை கடல் அலைகள் ஆக்ரோஷமாக மோதிவிட்டு செல்வதால், மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், உணவக உரிமையாளர்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும், ராட்சத அலைகள் கடற்கரை கோயிலின் மதில் சுவர் வரை சீறி எழும்பி வந்ததால், அங்குள்ள மணற்பரப்பு முழுவதும் கடல் நீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சியளித்தது. ராட்சத அலையின் தாக்கத்தால் படகுகள் மற்றும் மீன்பிடி வலைகள் அடித்து செல்லாமல் இருக்க கரைப் பகுதியில் மேடான இடத்தில் மீனவர்கள் பத்திரப்படுத்தி வைத்துள்ளனர். மேலும், நேற்று காலை நடைபயிற்சி மேற்கொள்ள வந்தவர்கள், கடற்கரைக்கு பொழுதை கழிக்க வந்த சுற்றுலாப் பயணிகள் ராட்சத அலையை வேடிக்கை பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றதை காண முடிந்தது.

Advertisement

Related News