தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மரக்காணம் அருகே ஒரே வீட்டில் பள்ளி மாணவி, அத்தை தூக்கிட்டு தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

 

Advertisement

மரக்காணம், ஜூன் 25: மரக்காணம் அருகே ஒரே வீட்டில் மாணவி மற்றும் அவரது அத்தை ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே பனிச்சமேடு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் விஜய் (25) மீனவர். இவரது மனைவி ஸ்ரீமதி (23). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனால் இவர்களுக்கு குழந்தை இல்லை.

செங்கல்பட்டு மாவட்டம் பரமன்கேணி மீனவர் கிராமத்தில் வசிக்கும் விஜய்யின் அக்கா மகள் கீர்த்திகா (15). இவர் தனது தாய்மாமனான விஜய் வீட்டில் தங்கி பனிச்சமேடு அருகில் உள்ள அனுமந்தை ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு விஜய், அவரது மனைவி ஸ்ரீமதி, அக்கா மகள் கீர்த்திகா ஆகிய 3 பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட்டுள்ளனர். இதனை தொடர்ந்து கீர்த்திகா மேல் மாடியில் படுத்து தூங்க சென்றுள்ளார்.

வழக்கம்போல் விஜய் நேற்று அதிகாலை மீன்பிடிக்க கடலுக்கு சென்று விட்டார். ஆனால் நீண்ட நேரமாகியும் மாடியை விட்டு கீர்த்திகா வெளியில் வராததால் விஜய்யின் மனைவி ஸ்ரீமதி மேல் மாடிக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கீர்த்திகா அங்கிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு பிணமாக தொங்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஸ்ரீமதி என்ன காரணத்தினாலோ அவரும் கீழ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த இருவரும் வீட்டை விட்டு வெளியில் வராததால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.  அப்போது கீழ் வீட்டில் ஸ்ரீமதியும், மேல் மாடி வீட்டில் கீர்த்திகாவும் தூக்கிட்டு இறந்த நிலையில் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் மரக்காணம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று 2 உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கனகசெட்டிக்குளத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இவர்களது உறவினர் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து 2 பேரும் ஒரே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதற்கு குடும்ப பிரச்னை காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் முதல் கட்ட விசாரணையை துவங்கியுள்ளனர். ஒரே குடும்பத்தில் 2 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News