தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீப்பிடித்ததில் பள்ளி மாணவன் சாவு

கிருஷ்ணகிரி, அக்.24: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே முகலூர் கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சப்பா, கட்டிட மேஸ்திரி. இவரது மகன் அபினேஷ் (13), ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். கடந்த 19ம் தேதி மாலை பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த அபினேஷ், காஸ் அடுப்பை ஆன் செய்து பற்றவைக்க முயன்றான். அப்போது லைட்டர் சரியாக வேலை செய்யவில்லை. இதனால் அடுப்பில் உள்ள ரெகுலேட்டரை மீண்டும் அணைக்காமல், அங்கிருந்து அபினேஷ் சென்றுவிட்டான்.

Advertisement

பின்னர் சிறிது நேரம் கழித்து மீண்டும் அங்கு வந்த அபினேஷ், லைட்டரை கொண்டு மீண்டும் அடுப்பை பற்ற வைக்க முயன்றான். அப்போது காஸ் கசிவு ஏற்பட்டிருந்ததால் எதிர்பாராத விதமாக பயங்கரமாக தீப்பிடித்தது. இதில், அபினேஷிற்கு தீக்காயம் ஏற்பட்டது. அவனது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்து மீட்ட அக்கம்பக்கத்தினர், அபினேசை தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் அபினேஷ் உயிரிழந்தான். இதுகுறித்து கெலமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement