தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாமி சிலையை சேதப்படுத்திய பள்ளி பஸ் டிரைவர் கைது

 

Advertisement

சேலம், மே 28: ஆத்தூர் அருகே சாமி சிலையை சேதப்படுத்திய தனியார் பள்ளி பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள தலைவாசல் வடகுமரையில் ஒரு சமூகத்திற்கு பாத்தியப்பட்ட சோனையன், சோனாயி கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழாவில் படையல் போடுவது தொடர்பாக கடந்த ஆண்டு, அப்பகுதியை சேர்ந்த மற்றொரு தரப்பினரிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னை இன்றி சுமூகமாக போக செய்தனர். இந்நிலையில் அந்த சோனையன், சோனாயி கோயிலுக்கு நேற்று முன்தினம் மாலை, மற்றொரு தரப்பை சேர்ந்த தனியார் பள்ளி பஸ் டிரைவர் தங்கராஜ் (53) என்பவர் சென்றுள்ளார். அவர், கோயிலில் இருந்த சாமி சிலை, வேல் கம்பு ஆகியவற்றை பிடுங்கி போட்டு சேதப்படுத்தியுள்ளார்.

இதனை அறிந்த கோயில் நிர்வாக தரப்பினர் திரண்டு வந்தனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆத்தூர் டிஎஸ்பி சதீஷ்குமார், தலைவாசல் இன்ஸ்பெக்டர் சாவித்ரி தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர். அப்போது கோயில் தரப்பில் பெரியசாமி, போலீசில் புகார் கொடுத்தார். அப்புகாரின் பேரில் டிஎஸ்பி சதீஷ்குமார் விசாரணை நடத்தி, கோயிலில் சாமி சிலையை சேதப்படுத்தி தகராறில் ஈடுபட்ட தங்கராஜ் மீது வழக்குப்பதிவு செய்தார். தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர். கைதான தங்கராஜை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மேலும், வடகுமரை பகுதியில் தொடர்ந்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement