தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் இடமாற்றம்

சேலம், அக்.30: சேலம் டவுன் காவல்நிலைய வளாகத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. 160 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அலுவலகம் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் அது பழமையான கட்டிடம் எனவும், அதனை இடிக்க கூடாது எனவும் தெரிவித்தனர். அதன்பின்னர் புதிய டவுன் காவல்நிலையம் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு பின்பகுதியில் கட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் திடீரென திருச்சி மெயின்ரோடு புலிகுத்தி சந்திப்பில் உள்ள தமிழ்நாடு கிராம வங்கி எதிர்பகுதியில் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது அங்கு செயல்பட்டு வருகிறது. டவுன் காவல்நிலைய வளாகத்தில் செயல்பட்டு வந்த மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமிஷனர் அனில்குமார் கிரி ஆய்வு செய்தபோது, மழைக்கு ஒழுகுவதாக அதிகாரிகள் கூறியதையடுத்து அவரது உத்தரவின் பேரில் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.புலிகுத்தி சந்திப்பில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் 5ரோடு பகுதிக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகம் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதே நேரத்தில் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் லட்சம், கோடி ரூபாய் அளவிலான மோசடி புகார்கள் தான் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனவே போலீஸ் கமிஷனரின் நேரடி கண்காணிப்பில் இருக்கும் வகையில் புதிய அலுவலகத்தை டவுன் பகுதியில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement

Advertisement