தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

 

Advertisement

சேலம், செப்.30: சேலம் மாவட்டத்தில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். தமிழகத்தில் வருவாய்த்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்யும் போராட்டத்தை தொடங்கினர். அதன்படி சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் துறையில் பணியாற்றும் அலுவலர்கள் நேற்று கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். இதேபோல் தாலுகா அலுவலகம், ஆர்ஐ அலுவலகங்களில் பணியாற்றுவோரும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை சங்கத்தின் மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறுகையில், ‘‘வருவாய்த்துறையினர் 9 அம்ச கோரிக்கையை முன்வைத்து பல்வேறு கட்ட போராட்டம் செய்து வருகிறோம். இதனை வலியுறுத்தி இன்றும், நாளையும் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுகிறோம். இப்போராட்டத்தில், சேலம் மாவட்டத்தில் 600க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் பணியாற்ற கூடுதல் பணியாளர்களை நியமிக்க வேண்டும். வருவாய்துறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட 9 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற ேவண்டும். இதனை வலியுறுத்தி வரும் 6ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்தில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்,’’ என்றார்.

Advertisement

Related News