தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏற்காட்டில் சாலையில் சுற்றும் காட்டு மாடு

ஏற்காடு, செப்.27: ஏற்காடு நகரில் ஒற்றை காட்டு மாடு சாலையில் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல் கின்றனர். அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளால் ஏற்காட்டில் சமீப காலமாக வனப்பகுதிகள், காபி தோட்டங்கள் அழிக்கப்பட்டு தங்கும் விடுதிகளாக கட்டப்பட்டு வருகிறது. காடுகள் அழிக்கப்பட்டு தண்ணீர் தேங்கும் பகுதிகள் ஆக்கிரமிக்கப்படுவதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருவது அதிகரித்துள்ளது. ஏற்காடு மலைகிராமங்களில் வனவிலங்குகள் உலா வருவது சாதாரண நிகழ்வாக இருந்தாலும், ஏற்காடு டவுன் பகுதியில் ஒற்றை காட்டுமாடு சுற்றிவரத் தொடங்கி உள்ளது.

Advertisement

நேற்று ஏற்காடு பஸ் நிலையம் அருகில் காட்டு மாடு ஒன்று சாலையில் சாவகாசமாக உலா வந்தது. இதனை ஆச்சர்யமாக பார்த்தாலும், பள்ளிக் குழந்தைகள், சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் அந்த சாலையில் செல்ல அச்சம் அடைகின்றனர். யாருக்கும் எந்தவித தொந்தரவும் விளைவிக்காமல் சாலையில் ஒற்றை காட்டு மாடு சுற்றித்திரிந்தாலும், அசம்பாவிதம் ஏதும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும், காட்டு மாட்டை அடர்ந்த வனப்பகுதியில் விரட்டவும், அவை வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் பாதுகாக்க வேண்டும் எனவும் வனத்துறையினரை பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement