தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பியூட்டி பார்லர் பூட்டை உடைத்து நைட் டிரஸ்களை திருடிய கும்பல்

சேலம், நவ.25: சேலம் அருகே பியூட்டி பார்லரின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கவரிங் நகை, நைட் டிரஸ்களை திருடிச் சென்றனர். சேலம் பழைய சூரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சிவா (51). இவர், கருப்பூர் தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தப்பகுதியில் இருக்கும் கந்தா காம்ப்ளக்சில் கவரிங் நகை விற்பனை கடை மற்றும் பியூட்டி பார்லரை நடத்தி வருகிறார். கடந்த 17ம் தேதி கடையை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். அடுத்தநாள் காலையில் கடைக்கு சென்றபோது, பூட்டு உடைக்கப்பட்டு பியூட்டி பார்லர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, கவரிங் நகை செட்-2, நைட் டிரஸ்-25, சல்வார், லெக்கின்ஸ்-40, ரூ.3,500 பணம் ஆகியவை திருடு போயிருந்தது. நள்ளிரவு நேரத்தில் இத்திருட்டில் மர்மநபர்கள் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

Advertisement

இதுபற்றி கருப்பூர் போலீசில் சிவா புகார் கொடுத்தார். குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வராணி தலைமையிலான போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இத்திருட்டில் ஈடுபட்ட நபர்களை போலீசார் தேடி வந்தனர். இதனிடையே அதே தண்ணீர்தொட்டி பஸ் நிறுத்தப்பகுதியில், முருகன் என்பவருக்கு சொந்தமான லாரி டிரான்ஸ்போர்ட் கம்பெனியில் பணம், லேப்டாப் திருட்டு போயிருந்தது. அத்திருட்டில் ஈடுபட்ட பூவரசன், கண்ணன், பீர் மைதீன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர். அந்த நபர்களுக்கு இத்திருட்டில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரித்து வருகின்றனர். பியூட்டி பார்லருக்குள் புகுந்து நைட் டிரஸ்களை திருடிச் சென்ற இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Related News