தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒருமாத பச்சிளம் குழந்தையுடன் தவிக்க விட்டு கணவர் மறுமணம்

சேலம், நவ.25: சேலத்தில் பிறந்து ஒருமாதமே ஆன நிலையில், குழந்தையுடன் தவிக்க விட்டு கணவர் மறுமணம் செய்து கொண்டதாக, மாற்றுத்திறனாளி இளம்பெண் கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளார்.

Advertisement

சேலம் மாவட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று கலெக்டர் பிருந்தாதேவி தலைமையில் நடந்தது. இதில், சேலம் அரிசிப்பாளையம் மல்லிசெட்டி தெருவை சேர்ந்த விஜயா (45), இவரது மகள் ஜோதிலட்சுமி (21) மற்றும் பிறந்து ஒருமாதமே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் வந்து மனு ஒன்றை அளித்தனர்.

இதுகுறித்து விஜயா கூறுகையில், ‘‘எனது மகள் ஜோதிலட்சுமி, பிறவியிலேயே காதுகேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். எனது கணவரின் பெற்றோர் வீடு, மணியனூரில் உள்ளது. தாத்தாவை பார்க்க அடிக்கடி ஜோதிலட்சுமி சென்றபோது, அங்குள்ள சாமுண்டி தெருவை சேர்ந்த சிவானந்தம் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் காதலாக மாறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் கர்ப்பமான ஜோதிலட்சுமிக்கு கடந்த மாதம் 25ம் தேதி, சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிவானந்தம் குழந்தையை பார்க்க வரவில்லை. அதேசமயம், ஜோதிலட்சுமியின் செல்போனுக்கு சிவானந்தம் பல வீடியோக்களை தொடர்ந்து அனுப்பியுள்ளார்.

அதில், ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்து கொண்டது, அப்பெண்ணுடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்கள் இருந்தன. இதுகுறித்து கேட்டபோது, `நான் திருப்பூரை சேர்ந்த வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டேன். இனி உங்களை பார்க்க வர மாட்டேன்’ என கூறிவிட்டார். இதனால் எனது மகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, சிவானந்தத்தை எனது மகளுடன் சேர்ந்து வாழ வைக்க வேண்டும் என்றார்.

Advertisement

Related News