தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓமலூர் பஸ் நிலையத்தில் கடையில் 2 லேப்டாப், 5 செல்போன் திருட்டு

ஓமலூர், செப்.23: ஓமலூர் பஸ் நிலையத்தில் உள்ள செல்போன் கடையை உடைத்த மர்ம நபர்கள் 2 லேப்டாப்கள், 5 செல்போன் மற்றும் பணத்தை திருடிச்சென்ற சிசிடிவி வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூர் பஸ் நிலையத்தில் கள்ளிக்காட்ைட சேர்ந்த சௌந்தர் என்பவர் செல்போன், லேப்டாப் விற்பனை மற்றும் சர்வீஸ் கடை வைத்துள்ளார். இவர் கடந்த சனிக்கிழமை இரவு வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், ஞாயிற்றுகிழமை அதிகாலை 5 மணியளவில் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் உள்ளே வைத்திருந்த 2 லேப்டாப், 5 செல்போன்கள் மற்றும் ரூ.5 ஆயிரத்தை திருடிச்சென்றார். மர்ம நபர் கடையில் திருடி விட்டு, அதை கைப்பையில் போட்டுக்கொண்டு, கடையின் கீழே பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்து இருந்த நிலையில், சாவகாசமாக நடந்து சென்ற சிசிடிவி வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இது ஓமலூர் நகர மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement