தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மண் கடத்திய லாரி பறிமுதல்

சேலம், நவ.21:சேலத்தை அடுத்த கருப்பூர் வெள்ளாளப்பட்டி பகுதியில் உள்ள கல் குவாரிகளில் இருந்தும், அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்தும் சிலர் அனுமதியின்றி கிராவல் மண்ணை லாரிகளில் கடத்தி வருவதாக, சேலம் மாவட்ட கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று முன்தினம், கனிமவளத்துறை தனித்தாசில்தார் ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் வெள்ளாளப்பட்டியில் உள்ள தனியார் கல்குவாரி பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த டிப்பர் லாரியை மடக்கி பிடித்தனர். அந்த லாரியை ஓட்டி வந்த டிரைவர், வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். தொடர்ந்து, லாரியில் சோதனையிட்டதில் 4 யூனிட் கிராவல் மண் இருந்தது. அதனை அனுமதியின்றி கடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, ரூ.3,800 மதிப்புள்ள கிராவல் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்து கருப்பூர் போலீசில் ஒப்படைத்து, தாசில்தார் ராஜ்குமார் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் நவாஸ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement