தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

3 ஏரிகளுக்கு உபரிநீரை திருப்பி விட வேண்டும்

சேலம், ஆக.14:மேட்டூர், ஓமலூர் பகுதியில் உள்ள 3 ஏரிகளுக்கு காவிரி உபரிநீரை திருப்பி விட்டு நிரப்ப வேண்டும் என கலெக்டரிடம் அதிமுக எம்எல்ஏ மணி கோரிக்கை மனு கொடுத்தார். சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை, ஓமலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ மணி தலைமையில் காவிரி உபரிநீர் நடவடிக்கை குழு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் சுரேஷ், நிர்வாகிகள் சண்முகவேல், பாலாஜி, சீனிவாசன் உள்ளிட்டோர் வந்தனர். அவர்கள், கலெக்டர் பிருந்தாதேவியிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

பின்னர் வெளியே வந்த மணி எம்எல்ஏ நிருபர்களிடம் கூறுகையில், ‘மேட்டூர் அணையில் இருந்து வெளியேறும் காவிரி உபரிநீரை, நீரேற்று திட்டம் மூலம் வறண்ட ஏரிகளுக்கு கொண்டு வந்து நிரப்புகின்றனர். இந்த வகையில், பாப்பாத்திக்காடு பகுதியில் இருந்து வைரனேரிக்கு கால்வாய் பணி நிறைவடைந்து விட்டதால், அந்த ஏரிக்கு உபரிநீரை கொண்டு வந்து சேர்க்க வேண்டும். அந்த ஏரி நிரம்பிவிட்டால், அரியாகவுண்டம்பட்டி ஏரி, செலவடை ஏரிக்கு திருப்பி விட முடியும். அந்த 3 ஏரிகளையும் உபரிநீரை கொண்டு நிரப்பி, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தினோம். இக்கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக கூறியுள்ளார்,’ என்றார்.