தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சேலம் ஆயுதப்படை மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

சேலம், ஆக.12: சுதந்திர தினத்தை முன்னிட்டு சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. வரும் 15ம் தேதி சுதந்திர தினம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இவ்விழாவை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் காந்தி ஸ்டேடியத்தில் விழா கொண்டாடப்படுகிறது. கலெக்டர் தேசிய கொடியை ஏற்றி வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவரது குடும்பத்தினரை கவுரவிக்கிறார். பணியில் வீர, தீர சாகசங்கள் புரிந்த போலீசார்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்குகிறார். பணியில் சிறந்து விளங்கிய ஊழியர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இவ்விழாவின்போது போலீசாரின் அணிவிகுப்பு நிகழ்ச்சி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. விழாவிற்கு இன்னும் 3 நாட்களே இருக்கும்பட்சத்தில் சேலம் காந்தி ஸ்டேடியத்தில் முன்னேற்பாடு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவை முன்னிட்டு நேற்று காலை சேலம் குமாரசாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல்துறை சார்பில் போலீசாரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு அணிவகுப்பு ஒத்திகையை நடத்தினர்.