தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சடலத்தை மயானத்தில் அடக்கம் செய்ய விடாமல் தடுத்த விவசாயி

கெங்கவல்லி, அக்.10: தலைவாசல் அருகே மயானத்தை ஆக்கிரமித்த விவசாயி, இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்ய விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தலைவாசல் அருகே உள்ள சதாசிவபுரம் கிராமத்தை சேர்ந்த பழனிவேல்(55), என்பவர் உடல் நலக்குறைவால் கடந்த 8ம்தேதி இரவு உயிரிழந்தார். இந்நிலையில், அவரது சடலத்தை அடக்கம் செய்வதற்காக, நேற்று காலை தெடாவூர் சாலையில் உள்ள மயானத்தில் பொக்லைன் மூலம் குழி தோண்டுவதற்காக உறவினர்கள் சென்றனர். அப்போது மயானத்தின் அருகில் லோகநாதன்(62), என்பவருக்கு சொந்தமான 3 ஏக்கர் நிலம் உள்ளது. அவரது நிலத்தின் அருகில் உள்ள மயானத்தின் ஒரு பகுதியையும் அவர் ஆக்கிரமித்துள்ளார். மேலும் தனது தோட்டத்தின் அருகில் இறந்தவரின் சடலத்தை அடக்கம் செய்யக்கூடாது என கூறியதால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த ஆத்தூர் ஊரக இன்ஸ்பெக்டர் பூர்ணிமா, சதாசிவபுரம் விஏஓ கார்த்திக், தலைவாசல் ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, இருதரப்பையும் அழைத்து பேசினர். மயானத்தில் அடக்கம் செய்வதை தடுக்க கூடாது. லோகநாதனிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்து நீதிமன்றம் மூலம் தீர்வு காண வேண்டுமென தெரிவித்தார். அதன்பின்னர் இறந்தவரின் சடலம் அடக்கம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Advertisement

Related News