தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கயிறு தயாரிக்கும் நார் மில்லில் தீ விபத்து

Advertisement

 

 

ஓமலூர், அக்.9: ஓமலூர் அருகே கயிறு தயாரிக்கும் நார் மில்லில் வெல்டிங் வேலை செய்யும் போது ஏற்பட்ட தீப்பொறியால் நார் மில் இயந்திரம் தீப்பற்றி எரிந்தது.

ஓமலூர் அருகே உள்ள திண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் பிரபு (45). இவர் அதே பகுதியில் தேங்காய் நாரிலிருந்து கயிறு தயாரிக்கும் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் நார் மில்லில் உள்ள இயந்திரத்தில் பழுது பார்க்கும் பணி செய்துள்ளனர். தொடர்ந்து இயந்திரத்திற்கு வெல்டிங் வைக்கும் பணி நடைபெற்றபோது தீப்பொறி பட்டு இயந்திரத்தில் தீப்பிடித்தது.

அந்த தீ, அருகிலிருந்த கழிவுநார் முழுவதும் பற்றி எரிந்ததால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. இதுகுறித்து அங்கிருந்தவர்கள் ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில், ஓமலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் தர்மலிங்கம் தலைமையிலான வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுமார் 3 மணி நேரம் போராடி தீயை முழுமையாக அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து தொளசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News