தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

கலைஞரின் 7ம் ஆண்டு நினைவு மவுன ஊர்வலம்

சேலம், ஆக.8: மறைந்த திமுக தலைவரான கலைஞர் கருணாநிதியின் 7ம் ஆண்டு நினைவு தினம் கட்சியினரால் தமிழ்நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதன்படி சேலம் மத்திய மாவட்ட திமுக சார்பில் நேற்று காலை மவுன ஊர்வலம் நடந்தது. மத்திய மாவட்ட திமுக செயலாளரும், சுற்றுலாத்துறை அமைச்சருமான ராஜேந்திரன் தலைமையில், சேலம் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள பெரியார் சிலையில் இருந்து மவுன ஊர்வலம் புறப்பட்டது. மாநகராட்சி, கலெக்டர் அலுவலகம் வழியாக பெரியார் மேம்பாலத்தை தாண்டி அண்ணாபூங்கா அருகில் இருக்கும் கலைஞர் சிலை வரை ஊர்வலம் சென்றது. பின்னர் அமைச்சர் ராஜேந்திரன், கலைஞரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கட்சி நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட அவைத்தலைவர் சுபாசு, பொருளாளர் கார்த்திகேயன், மேயர் ராமச்சந்திரன், மாநகர அவைத்தலைவர் முருகன், மாநகர செயலாளர் ரகுபதி, துணை செயலாளர்கள் கணேசன், தினகரன், மாநகர பொருளாளர் செரீப், மாநில தேர்தல்பணிக்குழு செயலாளர் தாமரைக்கண்ணன், மாநில தகவல் தொழிற்நுட்ப அணி துணை செயலாளர் டாக்டர் தருண், செயற்குழு உறுப்பினர்கள் கே.டி.மணி, ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர்கள் அமான், பூபதி, மண்டல குழு தலைவர்கள் அசோகன், தனசேகரன், பகுதி செயலாளர்கள் சரவணன், ஜெகதீஸ், பிரகாஷ், மணமேடு மோகன், இப்ராகிம், இளைஞரணி மாநகர அமைப்பாளர் கேபிள் சரவணன், மாணவரணி அமைப்பாளர் கோகுல்காளிதாஸ், கவுன்சிலர்கள் குணசேகரன், கோபால், சீனிவாசன், மஞ்சுளா, திருஞானம், தெய்வலிங்கம், நெசவாளர் அணி ஓ.டெக்ஸ். இளங்கோவன், அன்வர் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.