தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

2 எஸ்ஐக்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

சேலம், ஆக.5: கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் மனுக்களை சரிவர விசாரிக்கவில்லை என்ற புகாரின் பேரில் 2 எஸ்ஐக்கள் உள்பட 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி கௌதம்கோயல் உத்தரவிட்டுள்ளார். சேலம் மாவட்டம் சங்ககிரி உட்கோட்டத்திற்கு உட்பட்ட கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்களை எஸ்ஐ செந்தில்குமரன், சிறப்பு எஸ்ஐ முத்துமாணிக்கம் ஆகியோர் சரிவர விசாரிக்கவில்லை என்ற புகார் எழுந்தது. மேலும், லாட்டரி, போதை புகையிலை விற்பனையில் ஈடுபடும் நபர்களுக்கு சாதகமாக சில போலீசார் செயல்படுவதாகவும் கூறப்பட்டது.

இதுதொடர்பாக மாவட்ட எஸ்பி கௌதம்கோயல் நேரடி விசாரணை நடத்தினார். அந்த விசாரணையின் முடிவில், எஸ்ஐ செந்தில்குமரன், சிறப்பு எஸ்ஐ முத்துமாணிக்கம், ஸ்டேஷன் அமைச்சு பணியாளர் சரவணன் ஆகிய 3 பேரை சேலம் மாவட்ட ஆயுதப்படைக்கு இடமாற்றி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அத்துடன் உடனடியாக தங்களது பணியில் இருந்து விடுவித்துக்கொண்டு மாவட்ட ஆயுதப்படைக்கு செல்ல உத்தர விடப்பட்டது. அதன்பேரில் நேற்று மாலையே 3பேரும் சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படைக்கு வந்தனர். இந்த கொங்கணாபுரம் ஸ்டேஷனில் மேலும் சில போலீசார், வழக்குகளை சரிவர விசாரிக்காமல் இருப்பதாக கூறப்படுகிறது. அதுதொடர்பாகவும் எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். 2 எஸ்ஐக்கள் உள்பட 3 பேர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட இச்சம்பவம் சேலம் மாவட்ட போலீசாரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.