தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரயில்வே தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி

சேலம், டிச.2: சேலம் செவ்வாய்பேட்டை லாரி ஸ்டாண்ட் அருகேயுள்ள ரயில்வே தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சேலம் செவ்வாய்பேட்டை லாரி ஸ்டாண்ட் அருகே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு, தற்போது வாகன ஓட்டிகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த மேம்பாலத்திற்கு அருகே ரயில்வே தரைப்பாலமும் அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தரைப்பாலத்தில் மழைநீர், சாக்கடை கழிவுநீர் அதிகளவில் தேங்கி இருந்ததால் வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத அளவில் இருந்தது. இந்த நீரை அப்புறப் படுத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டனர்.

Advertisement

அதன் அடிப்படையில் தரைப்பாலத்தில் தேங்கிய மழைநீர் மோட்டார் மூலம் உறிஞ்சப்பட்டு வெளியேற்றப்பட்டது. அதன்பின்பு தரைப்பாலத்தை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் பெய்த மழையால் தரைப்பாலத்தில் மழைநீர் தேங்கி இருக்கிறது. இவை நாள் கணக்கில் வடியாமல் அப்படியே உள்ளது. இதனால் தரைப்பாலத்தில் வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே தரைப்பாலத்தில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement

Related News