தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்பி ஆய்வு

 

Advertisement

ஓமலூர், ஜூலை 26: ஓமலூர் போலீஸ் ஸ்டேஷன் 52 கிராமங்களை உள்ளடக்கி செயல்பட்டு வருகிறது. இன்ஸ்பெக்டர் அங்கப்பன் தலைமையில் எஸ்.ஐ சையத் முபாரக் மற்றும் போலீசார், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்ட எஸ்.பி கௌதம் கோயல், ஓமலூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆய்வு மேற்கொண்டார். இதற்காக போலீஸ் ஸ்டேஷன் புதுப்பிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது.

போலீஸ் ஸ்டேஷனை சுற்றி பார்த்த அவர், வழக்குப்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்தார். நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவாக முடிக்கவும் ஆலோசனைகள் வழங்கினார். மேலும், ஓமலூர் போலீசாரின் பணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டும் தெரிவித்தார். தொடர்ந்து போலீசாரின் குறைகளை கேட்டரிந்தார்.

போலீசார் அனைவரும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும், பழங்கள், காய்கறிகள் மற்றும் ஆரோக்கியமான உணவுகளை அதிகமாக எடுத்து கொள்ள வேண்டும் என ஆலோசனைகள் கூறினார். மேலும், வழக்குகளில் ஆஜராகாமல் உள்ள குற்றவாளிகளை கண்டறிந்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, வழக்கை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் உடனிருந்தார்.

Advertisement