தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

இடைப்பாடியில் 880 கிலோ கஞ்சா அழிப்பு

இடைப்பாடி, ஆக.13: காவல் துறை சார்பில், இடைப்பாடியில் உள்ள தனியார் நிறுவன கிடங்கில் 880 கிலோ கஞ்சா தீயிட்டு அழிக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு பகுதிகளில், போலீசார் வாகன தணிக்கையை தீவிரப்படுத்தினர். இதில், சாராயம் மற்றும் புகையிலை பொருட்கள், குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வந்தனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியிலிருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி வழியாக சேலம் மாவட்டத்திற்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்வதாக எழுந்த புகாரின்பேரில், போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை போலீசார் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சேலம் மாநகரம் முழுவதும், காவல் துறையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் தங்காயூர் ஊராட்சி கோனமோரி பகுதியில் உள்ள மருத்துவ கழிவுகளை அழிக்கும் தனியார் கிடங்கிற்கு மொத்தமாக கொண்டு வந்தனர். பின்னர், மாநகர காவல் துணை ஆணையர் கீதா தலைமையில், சேலம் மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில், கைப்பற்றப்பட்ட 880 கிலோ கஞ்சா தீயில் போட்டு அழிக்கப்பட்டது.

Related News