தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் வாலிபரிடம் ₹6.48 லட்சம் மோசடி

 

Advertisement

சேலம், மே 27: ஆன்லைனில் பகுதிநேர வேலை எனக்கூறி, சேலத்தை சேர்ந்த வாலிபரிடம் ₹6.48 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சேலம் மாவட்டம் பெத்தநாய்க்கன்பாளையத்தை சேர்ந்த 32 வயதான வாலிபர் ஒருவர், ஆன்லைனில் பகுதிநேர வேலைவாய்ப்பை தேடி வந்தார். அப்போது டெலிகிராம் மூலமாக அவரை தொடர்பு கொண்ட மர்மநபர், ஆன்லைனில் பகுதிநேரமாக திரைப்பட மதிப்பீடு பணி இருப்பதாக தெரிவித்தார். இதற்கு அந்த வாலிபர் ஒப்புகொண்டதால், ஒரு இணைப்பை அனுப்பி அதில் வரும் திரைப்படத்தை மதிப்பீடு செய்ய அறிவுறுத்தினார். இதற்கான ஊதியமாக, ₹600 வாலிபருக்கு கிடைத்தது.

தொடர்ந்து மற்றொரு லிங்கை அனுப்பிய மர்மநபர், அதில் முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம் என கூறினார். இதனை நம்பிய வாலிபர், பல்வேறு தவணைகளில் டெல்லி, குஜராத், அசாம், மத்திய பிரதேச மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு, ₹6.48 லட்சத்தை அனுப்பி முதலீடு செய்தார். ஆனால், அதன்பின்னர் மர்மநபரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் முதலீடு செய்த பணமும் திரும்ப கிடைக்கவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த வாலிபர், இதுகுறித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement