தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அறிவுசார் மையத்தை அமைச்சர் நேரில் ஆய்வு

வாழப்பாடி, அக்.26: அயோத்தியாபட்டணம் அருகே, காரிப்பட்டி 4வது வார்டு பகுதியில் ரூ.1 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையத்தை, நேற்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது, திமுக மாவட்ட பிரதிநிதி பொன்னுமலை, மணி, அதிகாரிகள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து, வாழப்பாடி அருகே பேளூரில் தாட்கோ வணிக வளாக கட்டிடப் பணிகள் குறித்து அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு செய்தார். அப்போது, பேளூர் பேரூராட்சி திமுக, அதிமுக வார்டு கவுன்சிலர்கள் மற்றும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள், பொதுமக்கள் திரண்டு வந்து அமைச்சரிடம் முறையிட்டனர்.

Advertisement

அதில், வாரச்சந்தையில் வியாபாரிகளுக்கும், வணிகர்களுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலையில், தாட்கோ வணிக வளாகம் கட்டுவதற்கும் போதிய இடவசதி இல்லை. இதனால், புதிய பஸ் நிலையத்தில் வாரச்சந்தை கூடுவதால் பொதுமக்கள் அவதியடைகின்றனர். பஸ்கள் பேருந்து நிலையத்திற்குள் செல்வதற்கு இடையூறாக இருப்பதால், மாற்று இடத்தில் இக்கட்டிடத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.அதனைத் தொடர்ந்து, அமைச்சர் மதிவேந்தன், மாற்று இடத்தில் கட்டிடம் கட்ட பரிசீலனை செய்யுமாறு வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது, வேலூர் நகர திமுக செயலாளர் சுப்ரமணியன், பேளூர் பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி, வார்டு கவுன்சிலர்கள் உடனிருந்தனர்.

Advertisement

Related News