தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சேலம், நவ.15: சேலத்தில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பிருந்தாதேவி துவக்கி வைத்தார். சேலத்தில் மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மற்றும் சேலம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தின் சார்பில், தேசிய குழந்தைகள் தினம், நவம்பர்-19 உலக குழந்தைகளுக்கெதிரான வன்கொடுமைகள் தடுப்பு தினம் மற்றும் நவம்பர்-20 சர்வதேச குழந்தைகள் தினம் ஆகியவற்றை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது.

Advertisement

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ெதாடங்கிய பேரணியை, கலெக்டர் பிருந்தாதேவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இப்பேரணி, திருவள்ளுவர் சிலை, பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை, பெரியார் சிலை மற்றும் சேலம் மாநகராட்சி அலுவலகம் வழியாக வந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நிறைவுபெற்றது.

பேரணி முடிவில் குழந்தை உரிமை மற்றும் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு வீதி நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. பேரணியில் நீல நிறத்தில் உடையணிந்து 18 வயதிற்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு மாவட்ட நிலை அலுவலர்கள், மருத்துவ துறையினர், காவல் துறையினர், சமூக நலத்துறை பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக குழந்தைகள் தின விழிப்புணர்வு உறுதிமொழியை கலெக்டர் பிருந்தாதேவி வாசிக்க, அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சந்தியா, தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் கஷ்மீர்ராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் எழில் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement