தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் 1,343 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.75.86 கோடி கடன் ரூ.328 கோடி வழங்க இலக்கு

சேலம், செப்.2: சேலம் மாவட்டத்தில், கூட்டுறவு வங்கிகள் மூலம் கடந்த 5 மாதத்தில் 1,343மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் பயிர்க்கடன்கள் வழங்கப்படுகின்றன. குறித்த காலத்திற்குள் கடனை செலுத்துவோருக்கு, வட்டி முழுவதும் தள்ளுபடி செய்யப்படுகிறது. சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 203 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் 5 பெரும் பலநோக்கு கூட்டுறவு சங்கங்கள் மூலம், விவசாயிகளுக்கு வட்டியில்லா பயிர்க்கடன்கள் மற்றும் கால்நடை பராமரிப்புக் கடன்கள், மகளிர் சுய உதவிக்குழு கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

இவை தவிர கூட்டுறவு சங்கங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மற்றும் குறைந்த வட்டியில் சுயஉதவிக்குழு கடன், நகைக்கடன் போன்ற 34 வகையான கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்கள் உறுப்பினராக சேருவதற்கு குறைந்த பட்சம் 12 நபர்கள், அதிகபட்சம் 20 நபர்கள் இருக்கவேண்டும். நடப்பாண்டில், சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகள் மூலம் மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு ரூ.328கோடி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிகுழுக்களுக்கு விரைந்து, கூட்டுறவு வங்கிகள் கடன் வழங்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். நடப்பாண்டில், கடந்த 5 மாதத்தில் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள் மூலமாக 1,343 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ75.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:

கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. தொழில் திறன், விற்பனை திறன் பெற்று குடும்ப பொருளாதார நிலையை உயர்த்த வழிவகை காண்கிறது. மகளிர் செய்த உற்பத்தி பொருட்களை இடைத்தரகர்கள் இன்றி விற்பனை செய்யும் திறன் வளர்கிறது. நடப்பாண்டில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.328 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில், 1343 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.75.86 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களின் ஆதார் நகல், ரேஷன் கார்டு நகல், நில உடமை தொடர்பான கணினி சிட்டா, பயிர் சாகுபடி தொடர்பாக விஏஓ அடங்கல் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இணையதளத்தில் விண்ணப்பித்தால், கூட்டுறவு சங்கங்கள் மூலம் பயிர்க்கடனை பெறலாம்.

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை தொடர்பு கொண்டும், பயிர்க்கடன் மற்றும் இதர கடன்கள் பெற்று பயனடையலாம். அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்புக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Advertisement

Related News