தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி தொழிலாளர்கள் போராட்டம்

தேனி, ஜூலை 23: தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடந்தது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகானந்தம் தலைமை வகித்தார். மாநில துணை தலைவர் பேயத்தேவன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட செயலாளர் சமூக நாதன் போராட்டத்தை துவக்கி வைத்தார்,

போராட்டத்தின் போது, 20 ஆண்டு காலம் பணி முடித்த வட்டார மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிரந்தர பணி வழங்க வேண்டும், கணினி இயக்குநர்களுக்கு வருடாந்திர சம்பள உயர்வு மற்றும் கிராம ஊராட்சியில் பணிபுரிகின்ற சுகாதார ஊக்குநர்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குநர்கள், தூய்மை பணியாளர்கள், தூய்மை காவலர்கள் மற்றும் பள்ளி தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமும் ஆண்டு ஊதிய உயர்வும், அகவிலைப்படியும் வழங்கிட வேண்டும். கொரோனா காலங்களில் பணியாற்றிய மேல்நிலைத் தொட்டி பணியாளர்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் கொரோனா ஊக்கத் தொகையை தர வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related News