தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை ஊரக வளர்ச்சி தலைமை பொறியாளர்கள் ஆய்வு செங்கம் சட்டமன்ற தொகுதி கண்ணகுருக்கை கிராமத்தில்

செங்கம், ஜூன் 22: செங்கம் சட்டமன்ற தொகுதி கண்ணகுருக்கை கிராமத்தில் சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தை சென்னை தலைமை ஊரக வளர்ச்சி தலைமை பொறியாளர்கள் ஆய்வு செய்தனர். செங்கம் சட்டமன்ற தொகுதியில் கண்ண குருக்கை கிராமம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் சிட்கோ அருகாமையில் சமத்துவபுரம் கட்டுவதற்கு உண்டான இட ஆர்ஜித பணிகள் ஏற்கனவே வருவாய் துறை மூலம் பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் சென்னை ஊரக வளர்ச்சி இயக்குனர் அலுவலகம் தலைமை பொறியாளர்கள் சடையப்பன், சேதுராமன் உட்பட அதிகாரிகள் குழுவினர் நேற்று கண்ணகுருக்கை கிராமம் அருகே சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Advertisement

ஆய்வின்போது சமத்துவபுரம் அமைய உள்ள இடத்தில் தமிழ்நாடு சமூக வன தோட்டத்தில் மரங்கள் அதிகம் உள்ளது. அந்த பகுதியினை எந்த இடையூறும் செய்யாமல் இயற்கை சூழலை ஒட்டி அந்த பகுதியை அப்படியே விட்டுவிட்டு அதற்கு பின்புறம் மலை குன்று பகுதியாக உள்ள இடத்தினை முறையாக சமன் செய்து அந்த இடத்தில் சமத்துவபுரத்திற்கு தேவையான இடத்தினை அளவீடு செய்து, அந்த பகுதியை சமம் செய்து அந்தப் பகுதியில் சமத்துவபுரம் கட்டிடங்கள் கட்டிக்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

மேலும் இயற்கையாக உள்ள மரங்களையும் சுற்றுச்சூழலையும் பாதிக்காக வகையில் அருகாமையில் காலியாக உள்ள குன்று மேட்டுப்பகுதியை சமம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆலோசனைகளை வழங்கினர். ஆலோசனையின் போது திருவண்ணாமலை ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் (பொறுப்பு) நீலமேகம், வட்டார வளர்ச்சி அலுவலர் பரிமேலழகன், ஒன்றிய பொறியாளர்கள் தமிழ்ச்செல்வன், செல்வி, பணி மேற்பார்வையாளர் பாஸ்கரன் மற்றும் கண் ணகுருக்கை.கோலா பாடி கிராம ஊராட்சி மன்ற தலைவர்கள் ஆய்வு செய்யும் பணியின் போது உடன் இருந்தனர்.

Advertisement