தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏடிசி பகுதியில் நிழற்குடை வசதி இல்லாததால் கிராமப்புற பயணிகள் அவதி

 

Advertisement

ஊட்டி, ஜூலை 12: ஊட்டியில் ஏடிசி பகுதியில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்கள் நிறுத்தும் பகுதிகளில் போதிய நிழற்குடை வசதி இல்லாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். ஊட்டியில் இருந்து கிராமப்புறங்களுக்கு ஏடிசி பகுதியில் இருந்து பஸ்கள் செல்கின்றன. இப்பகுதியில் இருந்து எல்லநள்ளி, எப்பநாடு, தேனாடுகம்பபை, அணிக்கொரை உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு அரசு மற்றும் மினி பஸ்கள் செல்கின்றன. இங்கு பஸ் ஸ்டேண்ட் வசதி இல்லாத நிலையில், அனைத்து கிராமங்களுக்கு செல்லும் பஸ்களும் இங்குள்ள சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன.

பயணிகள் அங்குள்ள சிறிய நிழற்குடைகளில் காத்திருக்க வேண்டியுள்ளது. இங்கு அதிகளவில் பயணிகள் நிற்க முடிவதில்லை.  பெரும்பாலான பஸ்கள் மற்றும் மினி பஸ்களும் நிழற்குடை அருகே நிறுத்தப்படுவதில்லை. இதனால், பொதுமக்கள் சாலையோரத்தில் பஸ்களுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. தற்போது அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, ஊட்டி நகராட்சி நிர்வாகம் ஏடிசி பகுதியில் கிராமப்புறங்களுக்கு செல்லும் பயணிகள் நலன் கருதி நிழற்குடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

Advertisement

Related News