தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்தவரின் வீட்டின் பீரோவை உடைத்து ரூ.7 லட்சம் கொள்ளை

புதுச்சேரி, ஜூலை 10: பிரான்ஸ் நாட்டின் குடியுரிமை பெற்றவர் புதுச்சேரியில் தங்கியிருந்தபோது அவர் வெளியே சென்றிருந்த நேரத்தில் மர்ம நபர்கள் வீடு புகுந்து ரூ.7 லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.புதுச்சேரி லாஸ்பேட்டை, ஏர்போர்ட் ரோடு, ஆழ்வார் தீர்த்த தெருவை சேர்ந்தவர் முகமது அலி (71). இவர் தற்போது புதுவைக்கு வந்து லாஸ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை 7 மணியளவில் இவர் தனது குடும்பத்துடன் வெளியே சென்றுவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் ஜன்னல் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது இரும்பு அலமாரியை உடைத்து அதில் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து முகமுது அலி லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து ரூ.7 லட்சம் பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Advertisement