தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரூ.23 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது உதவி ஆணையர் தகவல் தொழிலாளர் நல வாரியங்கள் மூலம்

திருவண்ணாமலை, மே 24: தொழிலாளர் நல வாரியங்கள் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில் ரூ.23 கோடி கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திருவண்ணாமலை மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மீனாட்சி தெரிவித்திருப்பதாவது: தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையின் மூலம் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில், தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு 18 தொழிலாளர்கள் நலவாரியங்கள் அமைக்கப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம் மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம், இயற்கை மரணம், விபத்து மரணம் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் தகுதி அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisement

அதன் அடிப்படையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தொழிலாளர் நலவாரியத்தில் 2,04,089 நபர்கள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ளனர். மேலும், 53,364 நபர்கள் தங்கள் பதிவினை புதுப்பித்துள்ளனர். நலவாரியங்களில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் கல்வி உதவித் தொகையாக 10,898 தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ரூ.23 கோடியே 5 லட்சத்து 72 ஆயிரத்து 650 வழங்கப்பட்டுள்ளது. திருமண உதவித் தொகையாக 2952 தொழிலாளர்களுக்கு ரூ.5 கோடியே 42 லட்சத்து 95 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. மகப்பேறு உதவித்தொகையாக 2 தொழிலாளர்களுக்கு ரூ12 ஆயிரம், இயற்கை மரணம் அடைந்த 1069 தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 கோடியே 11 லட்சத்து 71 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. விபத்து மரணம் அடைந்த 15 தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு ரூ. 18 லட்சத்து 45 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இவர் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Related News