தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சங்கரன்கோவிலில் நகை பட்டறையில் ரூ.1.50 லட்சம் தங்கம் திருட்டு

சங்கரன்கோவில், செப்.29: சங்கரன்கோவிலில் நகை பட்டறையில் ரூ.1.50 லட்சம் மதிப்பிலான தங்கத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சங்கரன்கோவில் சுந்தரர் தெருவில் நகை பட்டறை வைத்து நடத்தி வருபவர் ராமச்சந்திரன் மகன் சங்கரசுப்பு (56). இவர் கடந்த 5ம் தேதி நகை பட்டறையை அடைத்து விட்டு இரவு 10 மணிக்கு வீட்டிற்கு சென்றுள்ளார். நகை பட்டறையில் 5 கிராம் எடையுள்ள பேபி கை செயின் மற்றும் நகை வேலைக்கு பயன்படுத்த 15 கிராம் எடையுள்ள உதிரி தங்கத்தை வைத்து விட்டு வந்துள்ளார். மறுநாள் காலை சென்று பட்டறையை திறந்து நகை வேலை பார்ப்பதற்கு தங்கத்தை தேடியுள்ளார். இதில் தங்கம் திருடுபோய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதைதொடர்ந்து நகை பட்டறையில் உள்ள சிசிடிவி கேமராவை பார்த்துள்ளார். அப்போது அதிகாலை 1 மணியளவில் நகை பட்டறை பின்புறம் உள்ள கதவை திறந்து மர்ம நபர்கள் சிசிடிவியை சுவிட்ச் ஆப் செய்து விட்டு, பட்டறைக்குள் புகுந்து தங்கத்தை திருடி சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு சுமார் ரூ.1.50 லட்சம் ஆகும். இது குறித்து சங்கரசுப்பு அளித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நகை பட்டறையில் கடந்த மே மாதம் 30 கிராம் நகை கொள்ளை போனது. இதையடுத்து பட்டறையில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டது. ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் சிசிடிவி கேமராவை ஆப் செய்து மர்ம நபர்கள் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement