தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ரோகிணி கல்லூரி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்

அஞ்சுகிராமம், மே 19: அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் அமைந்துள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியுடன், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து நாட்டு நலப்பணித்திட்டத்தின் சிறப்பு முகாமை பஞ்சலிங்கபுரம் ஊராட்சி சமுதாய நலக்கூடத்தில் நடத்தியது. இம் முகாம், கல்லூரி தலைவர் நீல மார்த்தாண்டன், துணை தலைவர் முனைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் முனைவர் பிளஸ்ஸி ஜியோ, கல்லூரி முதல்வர் முனைவர் ராஜேஷ் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. முகாம் தொடக்க விழாவில் அண்ணா பல்கலைக்கழகம் நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ஜெயந்தி, பஞ்சலிங்கபுரம் ஊராட்சி தலைவர் சிந்து, துணைத் தலைவர் நாகராஜன், ஊராட்சி செயலர் தங்க ரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

Advertisement

முகாமில் பஞ்சலிங்கபுரத்தில் கால்வாய் சீரமைப்பு பணி,சுற்றுப்புற சுகாதார விழிப்புணர்வு, நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு, ஆலயங்கள் துப்புரவு பணி, பள்ளி வளாகம் துப்புரவு பணி,ஆளுமை திறன் வளர்ச்சி நிகழ்வுகள்,மின் சிக்கனம் விழிப்புணர்வு மற்றும் மருத்துவ முகாமும் நடைபெற்றது. முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் நாட்டு நல பணித்திட்ட மாணவ, மாணவிகள் 50 பேர் கலந்து கொண்டனர். முகாமை கல்லூரி நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர்கள், பேராசிரியர் எபி செல்வகுமார் மற்றும் டாக்டர் செந்தில் வேல் முருகன் ஆகியோர் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

Advertisement

Related News