தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் டையூறான சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்

முத்துப்பேட்டை, ஜூலை 12: முத்துப்பேட்டை ஆசாத்நகர் பகுதியில் இடையூறான சாலையோர கடைகளை அகற்ற வேண்டும் என்று முத்துப்பேட்டை வர்த்தகக்கழக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முத்துப்பேட்டை வர்த்தகக்கழக மாதந்திர செயற்குழு கூட்டம் தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர்கள் ராஜாராமன், நெய்னா முகமது, அந்தோணிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் கிஷோர் வரவு, செலவு வசித்தார். முன்னதாக துணைத்தலைவர் இளையராஜா வரவேற்றார். இதில் வர்த்தகர்களின் பிரச்னைகள் மற்றும் சங்க செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Advertisement

தில் முத்துப்பேட்டை ஆசாத்நகர் முக்கம் பகுதியில் எந்தநேரமும் அதிகளவில் மக்கள் வந்து செல்லும் ஒரு பகுதியாகவும், அதிகளவில் வாகனங்கள் சென்று வரும் ஒரு பகுதியாகவும் உள்ளது இப்படி போக்குவரத்து நெருக்கடி மிக்க இந்த பகுதியில் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கு இடையூறாகவும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் சமீபகாலமாக சாலையோர கடைகள் போட்டு மிகவும் இடையூறு ஏற்படுத்தி வருகிறார். இதுகுறித்து கேட்கும்போது பிரச்னைகள் ஏற்படுகிறது. அதனால் காவல்துறை இதனை சரி செய்யும் வகையில் அப்பகுதியில் தினமும் போடப்படும் சாலையோர கடைகளை அகற்ற வேண்டும்.இதேபோல சாலையோரம் நிறுத்தப்படும் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். முத்துப்பேட்டை புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் அசோகன், ஹைதர்அலி, கோவிந்தராஜ், சஹாப்தீன், திருவள்ளுவன், சாமிநாதன், நூருல் அமீன், புண்ணியமூர்த்தி, கலையரசன், ஹகீம், விவேக், இளங்கோ பாலகுமார் உட்பட ஏராளமான வியாபாரிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் பிரசாத் நன்றி கூறினார்.

Advertisement