தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பழநி பைபாஸில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம்: நடவடிக்கை எடுக்கப்படுமா?

 

Advertisement

பழநி, ஜூன் 28: பழநி பைபாஸ் சாலையில் கொட்டப்படும் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பழநி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிவகிரிப்பட்டியில் இருந்து இடும்பன் குளம் வழியாக சண்முகநதி வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையில் தேவஸ்தான பூங்கா துவங்கி இடும்பன் கோயில் வரை இருபுறமும் தற்போது குப்பை கழிவுகள், கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகள் அதிகளவு கொட்டப்படுகின்றன.

தவிர, வீடுகளில் அள்ளப்படும் செப்டிக் டேங் கழிவுகளும் இப்பகுதியிலேயே வெளியேற்றப்படுகின்றன. இதனால் இப்பகுதியில் எப்போதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் எப்போதும் புகை மூட்டமாகவே இருக்கிறது. இதனால் வாகனஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகின்றனர். இரவு நேரங்களிலேயே கழிவுகள் அதிகளவு கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இறைச்சி கழிவுகளை உண்ண வரும் நாய் போன்ற விலங்குகள் சாலைகளின் குறுக்கே ஓடுவதால் இச்சாலையில் விபத்துகளும் அதிகளவு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இச்சாலையில் குப்பை, கட்டிட, இறைச்சி கழிவுகள் கொட்டாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News