தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கம்பம் நகராட்சி அலுவலகத்தில் அரிசி கடத்தல் தடுப்பு ஆலோசனைக் கூட்டம்: தமிழக, கேரள அதிகாரிகள் பங்கேற்பு

 

Advertisement

கம்பம்/கூடலூர் பிப். 28: கம்பத்தில் நடைபெற்ற ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக, கேரளா வருவாய்த் துறையினர் கலந்துகொண்டனர். தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படும் ரேஷன் அரிசியை கடத்திச் சென்று விற்பனை செய்வது அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தன. இந்த நிலையில் நேற்று கம்பம் நகராட்சி சார்பில் ரேசன் அரிசி கடத்தலை தடுப்பது தொடர்பாக தமிழக கேரளா வருவாய்த் துறையினர் மற்றும் புட்செல் போலீசார் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டம் நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.

குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத்துறை மதுரை மண்டல துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீசன், தேனி மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சாந்தி மற்றும் கேரள மாநிலம் பீர்மேடு தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் மோகனன் ஆகியோரின் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

தேனி மாவட்ட குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு காவல்துறை மற்றும் உத்தமபாளையம் தாலுகா வட்ட வழங்கல் அலுவலர் பாண்டி மற்றும் கேரள மாநிலம் பீர்மேடு ரேஷன் ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேனி மாவட்டத்திலிருந்து கேரள மாநிலத்திற்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விவாதித்தனர். எல்லைப்பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் சோதனையை கடுமையாக்குவதுடன், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் உள்ள வாகனங்களின் எண்ணிக்கை, தனிநபர் தகவல்கள், மொபைல் எண் உள்ளிட்டவை இரு மாநில அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும், எல்லைப் பகுதிகளில் இரு மாநில அதிகாரிகளின் கூட்டு சோதனை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.

Advertisement