தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோபி பெரியார் திடலில் தினசரி மார்க்கெட்டை காலி செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ்

கோபி, ஜூன் 7: கோபி பெரியார் திடலில் கடந்த 4 ஆண்டுகளாக தற்காலிகமாக செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டை காலி செய்ய வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். கோபி நகரின் மையப்பகுதியான பெரியார் திடல் எதிரே சுமார் 100 ஆண்டுகளாக தினசரி மார்க்கெட் செயல்பட்டு வந்தது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்த மார்க்கெட் கட்டிடங்களை இடித்து விட்டு புதிய வணிக வளாகம் அமைக்க கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மார்க்கெட்டிற்கு எதிரே இருந்த வருவாய்த்துறைக்கு சொந்தமான பெரியார் மைதானத்தை தற்காலிகமாக மார்க்கெட்டாக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் புதிய வணிக வளாகம் கட்டுமான பணிகள் முடிவுற்று கடந்த மாதம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

Advertisement

அதைத்தொடர்ந்து, வணிக வளாகத்தில் பெருமளவு பணிகள் முடிக்கப்பட்டது. பெரியார் மைதானத்தில் செயல்பட்டு வரும் தினசரி மார்க்கெட்டை காலி செய்ய வருவாய்த்துறையினர் கடை உரிமையாளர்கள் 164 பேருக்கும் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். நகரில் பொதுக்கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு என உள்ள ஒரே இடம் பெரியார் மைதானம் மட்டுமே. சுமார் 100 ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்தி வரும் பெரியார் திடலை மீண்டும் மைதானமாகவே செயல்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் தினசரி மார்க்கெட்டை வருவாய்த்துறையினர் நோட்டீஸ் கொடுத்து உள்ளனர்.

Advertisement

Related News