தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேலை வாங்கி தருவதாக ஓய்வுபெற்ற ராணுவ வீரரிடம் பணம் மோசடி

விழுப்புரம், ஜூன் 5: சென்னை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி விழுப்புரம் ஓய்வு பெற்ற ராணுவ வீரரிடம் பணம் மோசடியில் ஈடுபட்ட முதியவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் மணி(63), ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருக்கு தனலட்சுமி கார்டனைச் சேர்ந்த வைத்தியநாதன்(65) என்பவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது. அப்போது மணியின் மகன் ராமேஸ்வரன் பிஇ பட்டம் முடித்த நிலையில் சென்னை மாநகராட்சியில் உதவி பொறியாளர் வேலை வாங்கி தருவதாக கூறி வைத்தியநாதன் மணியிடம் ரூ.3 லட்சம் பணம் வாங்கி உள்ளார்.

Advertisement

ஆனால் அவர் கூறியவாறு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இந்நிலையில் பணத்தை திரும்ப கேட்டபோது ரூ.2 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள ரூ.1 லட்சத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளார். பின்னர் வீட்டிற்கு சென்று கேட்டபோது அவரை திட்டி பணத்தை தர முடியாது என்று ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து மணி நேற்று அளித்த புகாரின்பேரில் வைத்தியநாதன் மீது மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News