தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி பண்டிகையையொட்டி ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை அமோகம்

 

Advertisement

ஈரோடு, ஜூலை 31: ஈரோடு ஜவுளி சந்தையில் ஆடி பண்டிகையையொட்டி சில்லரை வர்த்தகம் வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றதாக வியாபாரிகள் கூறினர். ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி வணிக வளாக மார்க்கெட்டில் வாரந்தோறும் செவ்வாய்கிழமை ஜவுளி சந்தை நடைபெற்று வருகின்றது. ஆடி மாத சீசன் விற்பனையானது கடந்த 3 வாரங்களாக தொடங்கி நடைபெற்று வருகின்றது. நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தையில், ஆடிப்பண்டிகையையொட்டி சில்லரை விற்பனையானது வழக்கத்தை விட கூடுதலாக நடைபெற்றது.

கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் மொத்த வியாபாரிகள் வந்திருந்து ஜவுளிகளை கொள்முதல் செய்தனர். இதேபோல், பிளாட்பார கடைகளிலும் விற்பனை அமோகமாக நடைபெற்றது. இதுகுறித்து ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறியதாவது: ஆடி பண்டிகை சீசன் விற்பனையானது கடந்த 3 வாரங்களாக நடைபெற்று வருகின்றது.

இந்த வாரம் நடைபெற்ற ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனையானது 45 சதவீதம் வரை நடைபெற்றது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிக அளவில் சில்லரை வியாபாரிகள் கலந்து கொண்டனர். கேரளாவில் மழை பெய்து வருவதால் அம்மாநிலத்தில் இருந்து வரும் மொத்த வியாபாரிகள் வரவில்லை. ஆனால், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மொத்த வியாபாரிகள் வருகை தந்திருந்தனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement

Related News