தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாமல்லபுரத்தில் சுனாமியின்போது கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயில் சீரமைப்பு பணி மும்முரம்

மாமல்லபுரம், ஜூன் 7: மாமல்லபுரத்தில் சுனாமியின்போது கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயிலை சீரமைத்து பாதுகாக்கும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலை தமிழ்நாட்டை தாக்கிய போது, மாமல்லபுரம் அடுத்த பட்டிப்புலம் ஊராட்சி சாலவான்குப்பம் பகுதியில் கடல் நீர் நீண்ட தூரம் பொதுமக்கள் வசிக்கும் பகுதிக்கு அருகே வந்து மணற்பரப்பை அரித்துக் கொண்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பி சென்றது. அப்போது, புலிக்குகைக்கு அருகே கோயில் கோபுரம் ஒன்று மணலில் புதைந்து காணப்பட்டது.

Advertisement

இதையடுத்து, தொல்லியல் துறையினர் அகழ்வராய்ச்சி செய்தபோது அது முருகன் கோயில் என தெரிய வந்தது. அப்போது, முதல் புலிக்குகையை சுற்றிப் பார்க்க வரும் பயணிகள், முருகன் கோயிலையும் சுற்றிப் பார்க்க ஆர்வம் காட்டினர். ஆனால், அங்கு செல்ல சரியான பாதை இல்லாததால் பயணிகள் சிரமப்பட்டனர். இதையறிந்த தொல்லியல் துறை நிர்வாகம் புலிக்குகைக்கு வரும் பயணிகள் அங்கிருந்து எளிதில் முருகன் கோயிலை சுற்றிப் பார்க்கும் வகையில் கடந்தாண்டு நடைபாதை அமைத்தது. இந்நிலையில், சுனாமியின்போது சாலவான்குப்பத்தில் கண்டுபிடிக்கப்பட்ட முருகன் கோயிலில் சிதிலமடைந்த பகுதிகளை படிப்படியாக சீரமைத்து பாதுகாக்கும் பணியில் தொல்லியல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement