தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவெறும்பூர் அருகே வீட்டில் அழுகிய நிலையில் ஓய்வு பெல் ஊழியர் சடலம் மீட்பு

 

Advertisement

திருவெறும்பூர், மே 4: திருவெறும்பூர் அருகே ஓய்வு பெற்ற பெல் ஊழியர் உடலை அழுகிய நிலையில் திருவெறும்பூர் போலீசார் மீட்டனர். திருவெறும்பூர் அருகே உள்ள வடக்கு காட்டூர் அந்தோணியார் கோவில் தெருவை சேர்ந்தவர் அருள்ராஜ் (63) இவர் பெல் நிறுவனத்தில் பணியாற்றி 2019ம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்த நிலையில்அருள்ராஜிக்கு கேத்தனின் என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். அவர்களை கடந்த 10 ஆண்டுகளாக அருள்ராஜ் பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார்.

இதனால் குடிப்பழக்கத்திற்கு அடிமை ஆனதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 30ம் தேதி வீட்டிற்குள் சென்றவர் மீண்டும் வீட்டைவிட்டு வெளியில் வரவில்லையாம். இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அருள்ராஜ் தங்கை மகன் நவீனுக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் தங்கை மகன்கள் தினேஷ் குமார், விஜய் பிரசன்னா ஆகியோர் வந்து பார்த்தபோது அருள்ராஜ் இறந்த நிலையில் உடல் அழுகி போய் கிடந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக அவர்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருள்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Related News