தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேயிலை விவசாயிகளுக்கு மானியம் அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

 

Advertisement

கூடலூர், ஜூலை 9: கூடலூர் சாலீஸ்பரி உறுப்பினர் நல சங்க கூட்டம் தொழிற்சாலை கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. சங்க தலைவர் கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஆலோசகர் சுப்பிரமணியம், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தராஜா, அப்பாஸ், சிவசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: அரசு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை சேர்ந்த உறுப்பினர்களுக்கு கடந்த 2022-23ம் ஆண்டுக்கான ஊக்க தொகையாக பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய் வழங்கியுள்ளதை வரவேற்று இதற்கான நிதியினை வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி, எம்பி ஆ.ராசா மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசின் வேளாண் துறையும், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டியும் பரிந்துரை செய்த பசுந்தேயிலை கிலோ ஒன்றுக்கு ஆதார விலையான ரூ.33.75 உடனடியாக வழங்க ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முடிவில், துணைத்தலைவர் அசைனார் நன்றி கூறினார்.

Advertisement