தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தஞ்சை மருத்துவமனைக்கு பஸ் இயக்க கோரிக்கை

 

தஞ்சாவூர், ஜூலை 14: நாஞ்சிக்கோட்டை பகுதிக்கு செல்லும் சாலையில் மருங்குளம் கிராமம் உள்ளது. மருங்குளத்தை சுற்றி புதுநகர், மின்னாத்தூர், வடக்குபட்டு, நடுவூர், வல்லுண்டான்பட்டு, வேங்கராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, சூரியம்பட்டி, கொல்லங்கரை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

மருங்குளத்தில் இருந்து அதன் சுற்றுவட்டார கிராமங்களுக்கும் மற்றும் கரம்பக்குடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை, செல்லம்பட்டி, குருங்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலைகள் பிரிந்து செல்வதால் இந்த சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இருக்கிறது. இந்நிலையில் மருங்குளத்தில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்வதற்கு நேரடியாக பஸ் போக்குவரத்து வசதி இல்லை.

எனவே பொதுமக்கள் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள மக்கள் அவசர காலத்தில் சிகிச்சை பெற மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே மருங்குளத்தில் இருந்து ஈ.பி. காலனி வழியாக தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரடியாக பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.