தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பாதுகாப்பற்ற நிலையில் உள்ள துவக்கப்பள்ளியை மாற்ற கோரிக்கை

 

Advertisement

பந்தலூர், ஜூலை 27: பந்தலூரில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை குழந்தைகளின் நலனுக்காக பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாற்றுவதற்கு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நீலகிரி மாவட்டம், பந்தலூரில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி நீதிமன்றம் அருகே செயல்பட்டு வருகிறது. இது மேடான ஒதுக்கு புறமாக போதிய இடவசதி இல்லாமல் இருந்து வருகின்றது. இதில் ஆரம்ப காலத்தில் 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வந்த நிலையில், தற்போது 50 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

ஆய்வு செய்வதற்கு கல்வி அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் சென்று வருவதற்கும் சிரமமான இடத்தில் செயல்பட்டு வருகிறது. மாணவர்கள் எளிதாக பள்ளிக்கு சென்று வர முடியாத நிலையும் உள்ளதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அந்த பள்ளியில் சேர்க்க தயக்கம் காட்டி வருகின்றனர்.

தற்போது பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சில கட்டிடங்கள் பயன்படுத்தாமல் இருந்து வருவதால் அந்த கட்டிடங்களில் துவக்கப்பள்ளியை செயல்படுத்த வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த கோரிக்கையை நகராட்சி நிர்வாகம் மற்றும் கல்வித்துறை விரைந்து செயல்படுத்தவும் பெற்றோர்கள் கேட்டு கொண்டுள்ளனர்.

Advertisement