தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சீர்காழி அருகே குண்டும் குழியுமான சாலையை சீரமைக்க கோரிக்கை

 

சீர்காழி, ஜூலை 6: குண்டும் குழியுமாகி போக்குவரததிற்கே லாயக்கற்ற நிலையில் இருக்கும் திருநன்றியூர்-ஆலவேலி சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோயில் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள திருநன்றியூர், ஆலவேலி, சேமங்கலம் மற்றும் பல்வேறு ஊராட்சிகளை இணைக்கின்ற சாலை கடந்த ஓராண்டாகவே குண்டும் குழியுமாக இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத அளவிற்கு காணப்படுகிறது.

விவசாயம் சார்ந்த கிராமங்களையும், குக்கிராமங்களையும் இணைக்கின்ற காரணத்தினால் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இச்சாலை அருகில் புகழ்மிக்க லஷ்மிபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினசரி பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாலை சீரமைக்கப்பட்டது. விவசாயத்திற்கு பயன்படும் வாகனங்கள், லாரிகள், டிராக்டர்கள், நடவு எந்திரங்கள் போன்றவை அடிக்கடி சென்று வருவதால் சாலை உள்வாங்கி சேதமடைந்துள்ளது. எனவே இந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.