தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிறுவர் பூங்காவில் உள்ள மரக்கழிவுகளை அகற்ற கோரிக்கை

 

Advertisement

ஈரோடு, ஏப்.28: ஈரோடு வஉசி சிறுவர் பூங்காவில் குவித்து வைக்கப்பட்டிருக்கும் மரக்கழிவுகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஈரோடு மாநகர பகுதிகளில் முக்கிய பொழுதுப்போக்கும் இடமாக வஉசி பூங்கா திகழ்கிறது. இப்பூங்காவிற்கு விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். குறிப்பாக, சிறுவர்கள் பூங்காவில் குழந்தைகள் விளையாட ஊஞ்சல் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், செயற்கை நீரூற்றுகள், சுற்றுலா பயணிகள் அமர்ந்து சாப்பிட ஓய்வு அறை ஆகியவை அமைக்கப்பட்டுள்ளதால், சிறுவர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும். தற்போது பள்ளி விடுமுறை நாட்கள் என்பதால், தினசரி 100க்கும் அதிகமான சிறுவர்கள் பூங்காவிற்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழை காரணமாக ராட்சத அரச மரம் ஒன்று உடைந்து சிறுவர் பூங்காவில் விழுந்தது. அந்த மரத்தை மாநகராட்சி நிர்வாகம் அகற்றாததால், மரக்கழிவுகள் மலைப்போன்று தேங்கி கிடக்கிறது. இதனால், விஷ ஜந்துகளின் மறைவிடமாக அப்பகுதி மாறி வருகிறது.

மேலும், ஆங்காங்கே புதர் மண்டிக்கிடப்பதால் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பூங்காவில் உள்ள மரக்கழிவுகளை முற்றும் முழுவதுமாக அகற்றி, மண்டிக்கிடக்கும் புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement