தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சிவகாசி பஸ் ஸ்டாண்டில் பயணிகளுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தர கோரிக்கை

சிவகாசி, செப்.2: சிவகாசி பஸ் ஸ்டாண்டில் இருக்கை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி பேருந்துநிலையத்திலிருந்து தினமும் 225 அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிவகாசி சுற்றுப்பகுதியில் உள்ள சில கிராமங்களுக்கு சென்று வரும் வகையில் ஏராளமான மினி பஸ்களும் இங்கு தான் நிறுத்தி வைக்கப்படுகிறது. இந்நிலையில் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் போதிய வசதிகள் இல்லதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

Advertisement

பஸ் ஸ்டாண்டின் உட்புறத்தில், பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் அமருவதற்கு போதிய இருக்கைகள் இல்லாததால் முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள், பள்ளி குழந்தைகள் என பலரும் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இருக்கைகள் இல்லாததால் பஸ்சிற்காக காத்திருக்கும் பயணிகள் தரையில் அமர்ந்திருக்கும்நிலை உள்ளது.ஆகையால் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கூடுதலாக இருக்கை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றும், விரிவாக்கப்பட்ட கட்டிடத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Related News